RCBvsPBKS | பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு அணி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணிக்கும், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணிக்கும் இடையேயான முதல் குவாலிஃபையர் போட்டி நேற்று (மே.29) நடைபெற்றது.
இரு அணிகளும் இதுவரை நடந்த 17 ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத நிலையில், நேற்று நேரடியாக பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்புக்காக மோதியது. இந்த போட்டி பஞ்சாப் மகாராஜா யாதவீந்திர சிங் மைதனாத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கான டாஸை வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிரங்கிய பஞ்சாப் அணி 78 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. பெங்களூர் அணியின் அபாரமான பந்து வீச்சால் 14.1 ஓவர்களியேயே பஞ்சாப் அணி ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் மொத்தமாக 101 ரன்கள் என்ற குறைந்தபட்ச ரன்களை பஞ்சாப் அணி அடித்திருந்தது. பெங்களூர் அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், யாஷ் தயாள் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 102 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி களமிறங்கின. இதில் விராட் கோலி 12 ரன்களில் ஜோஷ் இங்கிலிஸ் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசிய நிலையில், 19 ரன்களில் கேட்ச் ஆனார்.
இறுதியில் பெங்களூரு அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் 2025 இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக பெங்களூரு அணி முன்னேறியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2016-ம் ஆண்டு பெங்களூரு அணி ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.