For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வைரக் கற்களால் ஜொலித்த #RatanTata... இணையத்தில் வைரல்!

05:03 PM Oct 13, 2024 IST | Web Editor
வைரக் கற்களால் ஜொலித்த  ratantata    இணையத்தில் வைரல்
Advertisement

மறைந்த ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி 11,000 வைரக் கற்களை வைத்து அவரின் உருவத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

Advertisement

பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா கடந்த அக். 9-ம் தேதி காலமானார். இவரின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருடைய உடல் மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் ரத்தன் டாடாவின் உடல் மும்பை ஒர்லியில் உள்ள பார்சி சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்: #Vettaiyan ஆல்பம் – அப்டேட் கொடுத்த அனிருத்!

ரத்தன் டாடாவின் நினைவை போற்றும் விதமாக சமூக வலைதளங்களில் அஞ்சலிகள் தற்போது வரை குவிந்து வருகின்றன. இதில் ரத்தன் டாடாவுடன் தங்கள் தொடர்பு மற்றும் அவருடன் பழகிய நினைவுகளை பகிர்ந்து பலர் தங்கள் வருத்தத்தையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், மறைந்த ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி 11,000 வைரக் கற்களை வைத்து அவரின் உருவத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement