Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அயோத்தி ராமர் பிரதிஷ்டை - டெல்லியில் இறைச்சிக் கடைகளை மூட வலியுறுத்தல்!

07:46 PM Jan 20, 2024 IST | Web Editor
Advertisement

அயோத்தி ராமர் பிரதிஷ்டையை முன்னிட்டு டெல்லியில் இறைச்சிக் கடைகளை மூட இறைச்சி விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் இர்ஷத் குரேஷி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல்  பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : கே-பாப் பாடல்களை கண்டு ரசித்ததாக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் தண்டனை - வட கொரியாவில் அதிர்ச்சி!

இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த 16-ம் தேதி தொடங்கின. 121 ஆச்சார்யார்கள் இச்சடங்குகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வருகிற 22-ம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் இந்த பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உபி மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வை முன்னிட்டு அந்த நாளில், டெல்லியில் உள்ள இறைச்சிக் கடைகளை அடைக்குமாறு, டெல்லி இறைச்சி விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் இர்ஷத் குரேஷி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இர்ஷத் குரேஷி கூறியதாவது:

"அயோத்தியில் நடைபெறும் ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் கலந்துகொள்ளும் மக்களின் உணர்வுகளை மதித்து, அன்று ஒருநாள் மட்டும் இறைச்சி மற்றும் மீன் விற்கும் விற்பனையாளர்கள் தங்கள் வியாபாரத்தை நிறுத்தி வைக்கவேண்டும். ஒருநாள் கடையை மூடுவதால் நமது வியாபாரம் பெரிதாக பாதிக்கப்படாது. ஜன.22-ம் தேதி ஹிந்து சகோதர, சகோதரிகளின் கொண்டாட்டத்தை மதிக்கும் விதமாக இதனை நாம் செய்யவேண்டும்" என கூறினார்.

Tags :
Ayodhyabutcher shopsButchers AssociationConsecrationCeremonygeneral secretaryIrshad QureshiRamarTempleRamLallaStatue
Advertisement
Next Article