Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RainAlert | இரவு 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

07:37 PM Oct 28, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் நவ.3ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் பருவமழை சீசன் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவிட்டன. கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், சேலம், ஈரோடு மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement
Next Article