For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#RainAlert | இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை? எங்கெல்லாம் தெரியுமா?

08:45 PM Oct 16, 2024 IST | Web Editor
 rainalert   இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை  எங்கெல்லாம் தெரியுமா
Advertisement

தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே நாளை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை படிப்படியாக குறைந்து லேசான மழையே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வருகின்றது. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி தெற்கு ஆந்திரம் அருகே கரையை நோக்கிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,

"ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று சென்னை, காரைக்கால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்."

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement