Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்" – வானிலை ஆய்வு மையம் தகவல்!

07:05 AM Dec 24, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில், "இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிறு முதல் வெள்ளிக்கிழமை (டிச.24-29) வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகர் பகுதிகளில் வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும்" என தெரிவித்துள்ளது.

Tags :
ChennaiRMCIMDMeteorologicalCentreRainRainAlertTamilNaduWeatherUpdate
Advertisement
Next Article