கேரளாவில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் 'அலர்ட்'
கேரளாவில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் இன்று (ஜன.4) மற்றும் நாளை (ஜன.5) ஆகிய இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு அதே பகுதிகளில் நிலைக்கொண்டுள்ளதால் ஜன.4 மற்றும் 5 ஆம் தேதிகளில் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள, கர்நாடக மாநில கடற்கரை பகுதிகளில் மீன்பிடிக்க எந்த தடையும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.