For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அடுத்த 2 மணி நேரம்... 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை... எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11:17 AM Apr 17, 2025 IST | Web Editor
அடுத்த 2 மணி நேரம்    4 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை    எங்கெல்லாம் தெரியுமா
Advertisement

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 22ம் தேதி முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

அந்த வகையில், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில்  அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement