For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Rain Alert | இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
05:09 PM Jul 01, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
rain alert   இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
Advertisement

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 6ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

அதன்படி, தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை கொட்டி வருகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் அளவுக்கு அதிகமான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement