Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Rain Alert | மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
02:29 PM Jun 16, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வரை மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இருப்பினும் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவில் வெயில் வாட்டி வதைக்கிறது. அவ்வப்போது மழையும் கொட்டி வருகிறது. ஒருசில நேரங்கிளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை கொட்டியது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
news7 tamilRainrain alertRain UpdateTn RainsWeatherWeather Update
Advertisement
Next Article