For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Rain Alert | காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
07:20 AM Jun 10, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
rain alert   காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
Advertisement

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 12ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை கொட்டி வருகிறது.

Advertisement

இதையும் படியுங்கள் : பிளஸ் 1 பொதுத்தோ்வு | விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்… மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கட்டணம் எவ்வளவு?

இருப்பினும் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதற்கிடையே, சென்னையின் ஒருசில பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, தேனி, கோயம்புத்தூ, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement