For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Rain Alert | உஷாரா இருங்க மக்களே... காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
07:41 AM Jun 07, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
rain alert   உஷாரா இருங்க மக்களே    காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
Advertisement

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 12ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : கன்னியாகுமரி | இன்று வெளிநாடு செல்ல பிளான்… குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (ஜுன் 6) வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, சிவகங்ககை ஆகிய 6 மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதியிலும் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement