Rain Alert | 4 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை... வானிலை ஆய்வு மையம் கொடுத்த ஜில் அப்டேட்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 27ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அவ்வப்போது தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் வர முடியாத அளவில் வெயில் வாட்டி வதைக்கிறது.
இதையும் படியுங்கள் : “திரைத்துறையில் உச்சம் தொட்ட திரைக்கலைஞன்…” – விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!
சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.