Rain Alert | 13 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை... வானிலை ஆய்வு மையம் கொடுத்த ஜில் அப்டேட்!
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 12ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை கொட்டி வருகிறது.
இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டில் அமித் ஷா சைலெண்ட் ஆப்ரேசன் செய்ய உள்ளார்” – மதுரையில் நயினார் நாகேந்திரன் பேச்சு
இருப்பினும் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வருகிறது. இதற்கிடையே, சென்னையின் ஒருசில பகுதிகளில் இன்று மாலை லேசான முதல் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதியிலும் இன்று இரவு 9 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.