For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Rain Alert | மக்களே உஷார்... காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுளளது.
07:28 AM Jun 19, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுளளது.
rain alert   மக்களே உஷார்    காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
Advertisement

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் கடந்த 16ம் தேதி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் (ஜுன் 17) காலை 05:30 மணி அளவில், தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என கணிக்கப்பட்டது.

Advertisement

இதையும் படியுங்கள் : ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியா திரும்பிய 110 மாணவர்கள்!

இதேபோல், தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று முன்தினம் (ஜுன் 17) காலை 05:30 மணியளவில், குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் வரும் 22ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று (ஜுன் 17) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுளளது. அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement