For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Rain Alert | மக்களே உஷார்... சென்னை உள்பட 13 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை!

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
06:21 PM Jun 30, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
rain alert   மக்களே உஷார்    சென்னை உள்பட 13 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை
Advertisement

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 30) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 6ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : மணிப்பூரில் பதற்றம்… துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு!

அதன்படி, தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை கொட்டி வருகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் அளவுக்கு அதிகமான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 8.30 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement