Rain Alert | 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்... அடுத்த 2 மணி நேரம் இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படியுங்கள் : அகமதாபாத் விமான விபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்!
குறிப்பாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் நேற்று இரவு மழை வெளுத்து வாங்கியது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை கொட்டியது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.