For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Rain Alert | குடை ரெடியா? 8 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
01:30 PM Oct 06, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
rain alert   குடை ரெடியா  8 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்
Advertisement

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக,  திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : இந்தோனேசியா பள்ளி கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், வரும் 11ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

Tags :
Advertisement