For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேரவனில் 'ரகசிய கேமரா' | மலையாள சினிமா பாலியல் சர்ச்சையில் பகீர் கிளப்பும் நடிகை #RaadhikaSarathkumar!

10:47 AM Aug 31, 2024 IST | Web Editor
கேரவனில்  ரகசிய கேமரா    மலையாள சினிமா பாலியல் சர்ச்சையில் பகீர் கிளப்பும் நடிகை  raadhikasarathkumar
Advertisement

கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் நிர்வாண காட்சிகளை பதிவு செய்வதாக நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி அளித்துள்ளார்.

Advertisement

மலையாள திரையுலகம் குறித்த நீதிபதி ஹேமா குழு வெளியிட்ட அறிக்கையைத் தொடா்ந்து, மலையாள நடிகா்கள், இயக்குநா்கள் மீது பெண்கள் பலா் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனா். இந்தப் புகாா்கள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்தது.

இதனிடையே, நடிகா்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்று மலையாள திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழு கலைக்கப்பட்டது. கேரள அரசின் மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் பதவியில் இருந்து இயக்குநா் ரஞ்சித், மலையாளத் திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பதவியில் இருந்து நடிகா் சித்திக் ஆகியோா் விலகினா்.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த நடிகையொருவா் அளித்த புகாரில் கேரள இயக்குநா் ரஞ்சித் மீதும் மற்றொரு நடிகையின் புகாரில் நடிகா் சித்திக் மீதும் காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. இதைத் தொடா்ந்து, நடிகரும், ஆளும் சிபிஐ(எம்) எம்எல்ஏவுமான முகேஷ் மற்றும் பிற நடிகா்களான ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு ஆகியோா் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு புதன்கிழமை இரவு பதியப்பட்டது.

இந்நிலையில், கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து நடிகைகள் நடிகர்கள் மீது புகார் அளித்து வரும் நிலையில் இது தொடர்பான கேள்விக்கு நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி அளித்துள்ளார்.

மலையாள செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ராதிகா சரத்குமார் கூறியதாவது:

“ கேரளாவில் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் நிர்வாண காட்சிகளை பதிவு செய்கின்றனர். அதை செட்டில் நடிகர்கள் ஒன்றாக உட்கார்ந்து மொபைலில் இந்த காட்சிகளை பார்த்து ரசிப்பதை நான் நேரடியாக பார்த்து உள்ளேன்.இதனால் நான் பயந்து போய் ஹோட்டலில் அறை எடுத்து ஆடையை மாற்றி உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

நடிகை ராதிகா சரத்குமாரின் இந்த பேட்டி மலையாள திரையுலக பாலியல் வழக்கில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement