For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், கோட்டீஸ்வர் சிங் பதவியேற்பு!

11:21 AM Jul 18, 2024 IST | Web Editor
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர் மகாதேவன்  கோட்டீஸ்வர் சிங் பதவியேற்பு
Advertisement

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர். மகாதேவன், என். கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் இன்று பதவியேற்றனர்.

Advertisement

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஆர். மகாதேவன், காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கோடிஸ்வர் சிங் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். நேற்று முன்தின்ம( ஜூலை 16) இதற்கான அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், மகாதேவன், கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த 2 பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. தலைமை நீதிபதியையும் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் தற்போது 34 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர்.

இதே போல், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை  நீதிபதியாக கிருஷ்ணகுமார் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். புதிய தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டுள்ள பம்பாய் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான ஸ்ரீராம் பதவியேற்கும் வரை,  பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் பதவி வகிப்பார்.

Tags :
Advertisement