அன்புமணி குறித்த கேள்வி... ஒரே வரியில் பதிலளித்த ராமதாஸ்!
மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஜுன் 8) நடைபெற்றது. இதில், பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிப்பெறும் என தெரிவித்தார். தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், "தேர்தலில் வெல்வது அல்ல பாஜகவின் நோக்கம். அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைக் கபளீகரம் செய்து அந்த இடத்திற்கு பாஜக வர வேண்டும் என்பதே அவர்களின் ஒற்றை இலக்கு" என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள் : சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… இன்னொரு ஹீரோயின் இவரா?
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடன் ஆர்.எஸ்.பாரதியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராமதாஸ், "இதையெல்லாம் Take it Easy ஆக எடுத்துக்கொள்ளலாம்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனக்கும், என் மகன் அன்புமணிக்கும் உள்ள பிரச்னை சரிசெய்யப்படும். சரிசெய்தால்தானே தேர்தலில் நிற்க முடியும். தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெல்லும் என அமித்ஷா சரியாக சொல்லி இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடருமா என்று தற்போது கூற இயலாது. எந்த கட்சி குறித்தும் குறை சொல்லக்கூடிய நேரம் இதுவல்ல. கூட்டணி அமைத்த பிறகு கருத்துக்கள் கூறுவோம். விரைவில் நல்ல செய்தி வரும்" என்றார்.