பஞ்சாப் vs பெங்களூரு - மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
பெங்களூருவில் மழை பெய்து வருவதால் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டிக்கு டாஸ் போடுவதில் தாமதம்...
07:38 PM Apr 18, 2025 IST | Web Editor
Advertisement
ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
Advertisement
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், 4-ல் வெற்றியும், 2 போட்டிகளிலும் தோல்வியும் கண்டுள்ளது. புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியும் 6 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 2 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று ரன்ரேட் அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளது. இதனால் எந்த அணி 5வது வெற்றியை பதிவு செய்யும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் பெங்களூருவில் தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் டாஸ் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.