For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்!

07:29 PM Apr 26, 2024 IST | Web Editor
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்
Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

Advertisement

டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள் : நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நிறைவு : மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!

இந்நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெறும் 42வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.

இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி, 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று இரண்டில் தோல்வியை தழுவியுள்ளன. 10 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் 8 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, 2 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளில் வெற்றிப் பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் செல்ல இயலும். இவ்விரு அணிகளும் இதுவரை 32 தடவை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 21 ஆட்டத்திலும், பஞ்சாப் அணி 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடதக்கது.

Tags :
Advertisement