Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரளாவில் பெய்து வரும் கனமழை எதிரொலி - புதுச்சேரி மாஹேவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

06:40 AM Aug 01, 2024 IST | Web Editor
Advertisement

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கோழிக்கோடு அருகில் உள்ள புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கடந்த 29ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நேற்றும் கேரள முழுக்க கனமழை கொட்டி தீர்த்தது.  மழையையும் பொருட்பாடுத்தாமல் தற்காலிக இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

தொடர்ந்து கேரளாவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், கேரளாவில் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், கேரளாவின் கோழிக்கோடு அருகில் உள்ள புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்திலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகள் திட்டமிடபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Heavy rainfallKeralakerala landslideMahePuducherryRain Rain Alertschool leaveWayanad
Advertisement
Next Article