For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டுவீச்சு - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!

10:03 AM Nov 29, 2023 IST | Web Editor
மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டுவீச்சு   சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
Advertisement

புதுச்சேரியில் மதுபானக்கடை மீது இளைஞர் நாட்டு வெடிகுண்டு வீசும் சிசிடிவி
காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை பங்கூர் பகுதியில் தனியார் மதுபான
கடை உள்ளது.  இந்த கடைக்கு நேற்று (நவ.28) இரவு சுமார் 9:30 மணியளவில் வந்த இளைஞர் ஒருவர் கடையை நோக்கி  நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி சென்றார்.

அவர் வீசிய நாட்டு வெடிகுண்டு கடையின் ஷட்டரில் பட்டு வெடித்து சிதறியது. இந்த காட்சிகள் மதுபான கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது.

இதையும் படியுங்கள் ; உத்தரகாண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்பு | மகிழ்ச்சியில் இந்தியா!…

இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு கடையின் உரிமையாளர் பிரபு வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அதனை தொடர்ந்து, புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், மதுபான கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசியது அரியூர் பகுதியை சேர்ந்த செல்வா என தெரியவந்தது.  இதனை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். மேலும் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement