For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Puducherry சிறுமி கொலை வழக்கு | சிறையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதான நபர்!

08:00 AM Sep 16, 2024 IST | Web Editor
 puducherry சிறுமி கொலை வழக்கு   சிறையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதான நபர்
Advertisement

புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதியவர் விவேகானந்தன் தூக்கியிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கக் கோரியும் புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள், அதிமுக சார்பில் முழு அடைப்பு சட்டமன்றம் முற்றுகை, ஆளுநர் மாளிகை முற்றுகை உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதையடுத்து, காவல்துறையினர் விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன், கருணாஸ் என இருவர் கைது செய்தனர். இருவரையும் புதுச்சேரி காலாப்பட்டு உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவர் விவேகானந்தன் இன்று காலை சிறை கழிவறையில் தனது துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் #VCK தலைவர் திருமாவளவன்!

இதனைக் கண்ட சிறை அதிகாரிகள், அவரது உடலை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி, சிறையில் தூக்கியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement