For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்" - புஸ்ஸி ஆனந்த்!

06:36 PM Feb 23, 2024 IST | Web Editor
 யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்    புஸ்ஸி ஆனந்த்
Advertisement

யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர, யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து தகவல்கள் வெளியான நிலையில் புஸ்ஸி ஆனந்த் இந்த பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் @tvkvijayhq அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் கடந்த 19ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.

கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement