For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சொத்து வரி உயர்வு - பொய்யான தகவல் என்று தமிழ்நாடு அரசு விளக்கம்!

சொத்து வரியை உயர்த்தியதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
02:57 PM May 03, 2025 IST | Web Editor
சொத்து வரி உயர்வு   பொய்யான தகவல் என்று தமிழ்நாடு அரசு விளக்கம்
Advertisement

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

"மத்திய அரசின் 15-வது நிதிக்குழுவின் நிபந்தனைகளின்படி, ஒவ்வொரு நகர்ப்புற அமைப்பும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சியின் சதவிகிதத்தை ஒப்பிடுகையில் சராசரியாக 11.5 சதவிகிதம் சொத்துவரி வருவாயை உயர்த்தினால் மட்டுமே. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனையைக் கருத்தில் கொண்டு 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சொத்துவரி அரசாணை எண்.113, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (எம்ஏ4) துறை, நாள் 5.9.2024-ன்படி 6 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினால் சொத்துவரி எதுவும் உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், 3.5.2025 நாளிட்ட ஒரு நாளிதழில் "எவ்வித அறிவிப்புமின்றி உள்ளாட்சி அமைப்புகள், 6 சதவிகிதம் சொத்து வரியை மீண்டும் உயர்த்தி அமலுக்கு வந்துள்ளதாக" வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement