For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்த வாரம் #BiggBoss வீட்டிலிருந்து வெளியேறிய நபர் யார் தெரியுமா?

07:48 AM Oct 14, 2024 IST | Web Editor
இந்த வாரம்  biggboss வீட்டிலிருந்து வெளியேறிய நபர் யார் தெரியுமா
Advertisement

பிக்பாஸ் சீசன் 8 போட்டியின் முதல் வாரத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேறினார்.

Advertisement

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8 கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கடந்த சீசன்களை போல் அல்லாமல் இந்த முறை வித்தியாசமான முறையில் போட்டி கொண்டு செல்லப்பட்டு வருகிறது. பிக்பாஸ் வீட்டையே இரண்டாக பிரித்து ஆண்களுக்கு ஒருபக்கம், பெண்களுக்கு ஒருபக்கம் என போட்டி சென்று கொண்டிருக்கிறது.

மேலும் முதல்முறையாக வீட்டிற்குள் வந்த 24 மணிநேரத்திலேயே போட்டியாளர் சாச்சனா வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களிடையே பெரும் விவாதத்திற்கு வழிவகுத்தது. பின்னர் மீண்டும் அவர் கொண்டுவரப்பட்டார். தொடர்ந்து இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷன் லிஸ்டில் ஜாக்குலின், பேட்மேன் ரவி, அருண், முத்துகுமரன், சௌந்தர்யா மற்றும் ரஞ்சித் இருந்தனர்.

இதையும் படியுங்கள் : இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய #Hezbollah | 4பேர் உயிரிழப்பு!

இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் 6 பேரில் ஒவ்வொருவராக விஜய் சேதுபதி நீக்கிக்கொண்டு வந்தார். இதில் செளந்தர்யா, முத்துக்குமரன், அருண் பிரசாத் நீக்கப்பட்டனர். பின்னர் மக்கள் வாக்களித்த நபரின் பெயரை விஜய் சேதுபதி வாசித்தார். இதில் ரவீந்தர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Tags :
Advertisement