For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரைம் வாலிபால் லீக் - சாம்பியன் பட்டத்தை வென்றது கோழிக்கோடு ஹீரோஸ் அணி!

07:39 AM Mar 22, 2024 IST | Web Editor
பிரைம் வாலிபால் லீக்   சாம்பியன் பட்டத்தை வென்றது கோழிக்கோடு ஹீரோஸ் அணி
Advertisement

சென்னையில் நடைபெற்ற பிரைம் வாலிபால் லீக் தொடரின் பரபரப்பான இறுதி
போட்டியில் டெல்லி டூபான்சை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை
கோழிக்கோடு ஹீரோஸ் கைப்பற்றியது.

Advertisement

பிரைம் வாலிபால் லீக் தொடர் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த மாதம்
15 ஆம் தேதி துவங்கி ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இந்தத் தொடரில் நடப்பு
சாம்பியன் அகமதாபாத் டிபன்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ்,
சென்னை பிளிட்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ்,
கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ், மும்பை மீட்டியார்ஸ், ஆகிய அணிகளுடன் டெல்லி
டூபான்ஸ் அறிமுக அணியாக களமிறங்கி விளையாடி வந்தது.

லீக் மற்றும் சூப்பர் 5 சுற்று போட்டிகள் முடிவில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி
முதலிடம் பிடித்து நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர்
சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபன்டர்சை வீழ்த்தி டெல்லி
இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில்
கோழிக்கோடு ஹீரோஸ் டெல்லி டூபான்ஸ் அணிகள் மோதின. இந்த தொடரில் துவக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோழிக்கோடு அணி இறுதி போட்டியிலும் அதனை தொடர்ந்தது.

முதல் இரண்டு செட்டை கோழிக்கோடு அணியும், மூன்றாவது செட்டை டெல்லியும் கைப்பற்ற நான்காவது சுற்றில் அனல் பறந்தது.  இருந்தாலும் கோழிக்கோடு ஹீரோஸ் நான்காவது சுற்றை கைப்பற்றி 15-13,15-10,13-15,15-12 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கோழிக்கோடு ஹீரோஸ் அணி வீரர் ஜெரோம் வினித் தட்டி சென்றார்.

Tags :
Advertisement