Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி!

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
02:44 PM May 30, 2025 IST | Web Editor
இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
Advertisement

ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்சியை பிகார் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி பீகார் தலைநகர் பாட்னா சென்றுள்ளார்.

Advertisement

பாட்னா விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சி மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்துள்ளனர். நடைபெற்று வரும் 18வது ஐ.பி.எல் தொடரில் கடந்த மே 1ம் தேதி மும்பை-ராஜஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில், களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்சி, 35 பந்துகளில் 100 ரன்கள் அடித்து சதம் படைத்தார்.

இது கிரிக்கெட் வீரர்களால் மட்டுமின்றி பலதரப்பாலும் பாராட்டப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பாட்னா விமான நிலையத்தில் வைபவ் சூரியவன்சி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இன்று நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் வைபவின் கிரிக்கெட் திறமையை நாடு முழுவதும் பாரட்டியதாகவும், எதிர்கால வெற்றிகளுக்கு தனது வாழ்த்துக்கள் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Tags :
BiharPMModiRRVaibhav Suryavanshi
Advertisement
Next Article