Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி.!

09:47 AM Jan 21, 2024 IST | Web Editor
Advertisement

3 நாள் சுற்றுப் பயணமாக தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக புறப்பட்டுச் சென்றார்.

Advertisement

கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் 3 நாட்களுக்கு பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு செல்கிறார்.

இதையொட்டி, மதுரை விமான நிலையம் மற்றும் அதன் அருகே உள்ள கிராம பகுதிகளைச் சுற்றி 8 அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. நேற்று திருச்சி சென்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜைகளில் பங்கேற்று ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றார்.

இந்த நிலையில் இன்ற தனுஷ்கோடி அரிச்சல் முனையில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்பதாக சாலை மார்க்கமாக அரிச்சல் முனைக்கு புறப்பட்டார். இதன்பின் அங்கு பூஜைகள் முடிந்த பிறகு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்று தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

Tags :
AyodhyaAyodhya Ram MandirAyodhya Ram Mandir inaugurationAyothi Ramar TemplePM ModiPMO IndiaRam MandhirRam MandirRamar Temple
Advertisement
Next Article