For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி புது அறிவிப்பு வெளியீடு!

10:27 PM Jan 22, 2024 IST | Web Editor
அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி புது அறிவிப்பு வெளியீடு
Advertisement

அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக தனது X தளப் பதிவில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

ராமரின் ஒளியிலிருந்து உலகிலுள்ள அனைத்து பக்தர்களும் ஆற்றலைப் பெறுகின்றனர். இந்த மங்களகரமான நாளில் என்னுடைய தீர்மானம் மேலும் வலுவடைந்துள்ளது. இந்திய மக்களின் இல்லங்களில் சோலார் மேற்கூரைகள் நிறுவப்பட வேண்டும். அயோத்தியிலிருந்து திரும்பிய பிறகு நான் மேற்கொண்ட முதல் முடிவு இதுதான். எனது அரசு பிரதம மந்திரி சூர்யோதயா திட்டத்தை தொடங்கும். இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும். இந்தத் திட்டத்தினால் மின் கட்டணம் குறைவதோடு, இந்தியாவை ஆற்றலில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற உதவும் எனப் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement