For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லியில் தமிழ் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

01:05 PM Jan 14, 2024 IST | Web Editor
டெல்லியில் தமிழ் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி
Advertisement
டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். 

நாளை தை முதல் நாளில் தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். தமிழக மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்கு தமிழ் பாரம்பரியமான வேட்டி, சட்டை மற்றும் துண்டு சகிதம் வந்த பிரதமர் மோடி, பொங்கல் தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அங்கு வந்தவர்களிடையே பேசிய பிரதமர் மோடி தமிழில் “இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று கூறினார். இந்த பொங்கல் விழாவில் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Advertisement