Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அல்காட்ராஸ் சிறைசாலையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் உத்தரவு!

கலிபோர்னியா மாகாணத்திலுள்ள அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
09:27 AM May 06, 2025 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவின் மோசமான சிறைச்சாலைகளில் ஒன்று அல்காட்ராஸ் சிறை. இந்த சிறைச்சாலை 1912-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து அல்காட்ராஸ் சிறைச்சாலை அமைந்துள்ள சிறு தீவு தற்போது ஒரு சுற்றுலாத் தளமாக செயல்பட்டு வருகிறது.

Advertisement

சான் பிரான்சிஸ்கோவில் கோல்டன் கேட் பாலத்துக்கு அருகே இது அமைந்துள்ளது. இந்த நிலையில் பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "அமெரிக்கா நீண்டகாலமாக கொடிய மற்றும் வன்முறை குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அல்காட்ராஸ் சிறைச்சாலையை புனரமைத்துத் திறக்க உத்தரவிட்டுள்ளேன். அல்காட்ராஸ் சிறைச்சாலையை திறப்பது சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக திகழும்.

சிறையைத் திறக்க சிறைத்துறை, நீதித்துறை, எஃப்பிஐ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்தச் சிறைச்சாலை அமெரிக்கா மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகளை சிறைவைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Alcatraz prisonOrdersPresidentReopeningTrump
Advertisement
Next Article