அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு இன்று முதல் தடை - அதிபர் டிரம்ப் உத்தரவு!
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, இரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, இரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய இன்று முதல் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், புருண்டி, கியூபா, லாவோஸ், சியேரா லியோனிக், டோகோ, துருக்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.