For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு தடை - அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

தேச பாதுகாப்பிற்காக 12 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
10:13 AM Jun 05, 2025 IST | Web Editor
தேச பாதுகாப்பிற்காக 12 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு தடை   அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
Advertisement

தேச பாதுகாப்பை கரணம் காட்டி 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, இரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

Advertisement

அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட பிரகடனம், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை பகுதியளவு கட்டுப்படுத்துகிறது. இந்த புதிய உத்தரவு ஜூன் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகெய்ல் ஜாக்சன் கூறுகையில், "நமது நாட்டிற்கு வந்து நமக்கு தீங்கு விளைவிக்க விரும்பும் ஆபத்தான வெளிநாட்டவர்களிடம் இருந்து அமெரிக்கர்களைப் பாதுகாப்பதற்கான தனது வாக்குறுதியை அதிபர் டிரம்ப் நிறைவேற்றுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement