For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நேபாளத்தில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வு...

07:00 AM Nov 04, 2023 IST | Web Editor
நேபாளத்தில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வு
Advertisement

நேபாளத்தில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை, நவ.3) இரவு 11.32 மணி அளவில் அந்த நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 1 நிமிடத்துக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது. இதில் 70 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வட இந்தியாவில் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

புதுடெல்லி, நொய்டா, பாட்னா ஆகிய பகுதிகளில் நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்துள்ளனர். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். வீட்டில் படுத்திருந்த போது சீலிங் ஃபேன் ஆடியதாகவும், கட்டிலில் அதிர்வுகளை உணர்ந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளனர். அதன் பிறகே தங்களை போன்று பலரும் வீட்டை விட்டு வெளியே வந்திருந்ததை அறிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
Advertisement