For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேரளாவில் பிரபல நடிகர் உயிரிழப்பு! சந்தேகத்திற்கு உரிய மரணம் குறித்து விசாரணை!

05:24 PM Nov 19, 2023 IST | Web Editor
கேரளாவில் பிரபல நடிகர் உயிரிழப்பு  சந்தேகத்திற்கு உரிய மரணம் குறித்து விசாரணை
Advertisement

அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் வாயிலாக பிரபலமான நடிகர் வினோத் தாமஸ் உயிரிழந்தது அவரது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் பாம்பாட்டி பகுதியில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. அந்த காரின் கண்ணாடிகள் முழுவதும் மூடப்பட்டிருந்த நிலையில், காருக்குள் ஒருவர் அமர்ந்திருப்பது தெரிய வந்தது.

அந்த நபர் காரில் இருந்து நீண்ட நேரமாக இறங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் காரின் கண்ணாடியை தட்டி பார்த்தனர். ஆனால் உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதையும் படியுங்கள்:வெளியானது ‘நா ரெடி’ பாடலின் முழு வீடியோ -இணையத்தில் வைரல்!

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காரின் கண்ணாடியை உடைத்தபோது காருக்குள் இருந்தவர் உணர்வற்ற நிலையில் காணப்பட்டார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது பிரபல நடிகர் வினோத் தாமஸ் என தெரியவந்தது.

அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தின் மூலம் கேரளாவில் பிரபலமானவர் வினோத் தாமஸ்.  இவர் ’ஒருமுறை வந்து பார்த்தா’, ’நெத்தோலி ஒரு செரிய மீன்ல்ல’, ’ஹேப்பி வெட்டிங்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து சந்தேகம் எழுத்துள்ளது. காரின் ஏசியில் இருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்பட்டதா?  அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வினோத் தாமசின் உடல் தற்போது பாம்பாடி தாலுகா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடிகர் ஒருவர் காருக்குள்  சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement