பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டம் - தமிழ்நாடு அரசு ஒப்புதல்!
சென்னை பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்தை இருகட்டங்களாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
06:13 PM Jun 02, 2025 IST | Web Editor
Advertisement
சென்னை பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை 52.94 கி.மீ தூர மெட்ரோ ரெயில் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி- சுங்குவார்சத்திரம் வரை 27.9 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
Advertisement
இரண்டாம் கட்டமாக சுங்குவார்சத்திரம் - பரந்தூர் வரை 25 கி.மீ தூரத்திற்கு அமையவுள்ளது. பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.