Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!

09:46 AM Dec 13, 2023 IST | Web Editor
Advertisement

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. 

Advertisement

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிப்பதற்கான முன் பதிவு ஒரு மாதத்துக்கு முன் தொடங்குவது வழக்கம்.  அந்த வகையில் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 14-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.  இந்த நிலையில், 13-ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

இதையும் படியுங்கள்: மிகவும் மோசமான நிலையில் டெல்லி – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!

தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜன. 14-ம் தேதி (ஞாயிற்று) போகி பண்டிகை தொடங்கி,  ஜன. 15-ம் தேதி பொங்கல்,  16-ம் தேதி மாட்டுப்பொங்கல்17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, 13-ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக,  அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடங்கியது.  அரசு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Tags :
BUSBus Ticket Bookingnews7 tamilNews7 Tamil UpdatesOnline TicketPongalPongal FestivalReservationTicket BookingTicketsTN Transport
Advertisement
Next Article