For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'அரசியலும் ஆன்மீகமும் கலக்காது' - தமிழிசைக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்!

09:19 PM Oct 19, 2024 IST | Web Editor
 அரசியலும் ஆன்மீகமும் கலக்காது    தமிழிசைக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்
Advertisement

அரசியலும் ஆன்மிகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,

இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கோபம் வருகிறது! தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, திருவண்ணாமலையில் ‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – ‘சரி’ வலம்! ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதலமைச்சர் ! ‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜனுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே…! நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது.

ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - தமிழிசை சௌந்தரராஜனும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/Udhaystalin/status/1847597301096718818
Advertisement