For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லாவுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.
06:42 PM Jun 28, 2025 IST | Web Editor
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லாவுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்
Advertisement

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் ஆக்ஸ்மின் - 4 என்ற பெயரில் 4 பேர் கொண்ட குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டது. இந்த ஆக்சியம் திட்டம் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த ஜூன் 25ம் தேதி பிற்பகல் 12.01 மணியளவில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் விண்ணில் பாய்ந்தது.

Advertisement

இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றார். சுமார் 28 மணிநேர பயணத்துக்குப் பின்னர் 400 கி.மீ. தொலைவில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் கடந்த ஜூன் 26ம் தேதி மாலை 4 மணியளவில் இணைந்தது.

தொடர்ந்து விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள சுபான்ஷு சுக்லா குழுவினர் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லாவுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார். சுக்லாவின் உடல் நலம், விண்வெளி பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement