Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நேபாளத்தில் விமானம் விழுந்து விபத்து! 18 பேர் உயிரிழப்பு!

12:04 PM Jul 24, 2024 IST | Web Editor
Advertisement

நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அதன் ஓடுபாதையில் விழுந்து  விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 

Advertisement

நேபாளத்தை  தலைநகரமாக கொண்டுள்ள காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சௌரியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் காலை 11 மணியளவில் புறப்பட்டது. இந்நிலையில், சௌரியா ஏர்லைன்ஸ் விமானம், விமான நிலையத்திலிருந்து புறப்படும் போது அதன் ஓடுபாதையில் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதையும் படியுங்கள் : மதுரையில் பேருந்து ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்! இணையத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

இந்நிலையில், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த விமான தீ பிடித்து எரிய தொடங்கியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது. மேலும், விபத்தில் சிக்கிய விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 19 பேர் இருந்தாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும், இந்த விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags :
19 passengersCrashinvestigationNepalPlanePolice
Advertisement
Next Article