For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு!

07:30 PM Jan 30, 2024 IST | Web Editor
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
Advertisement

நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் பல்வேறு கட்சிகள் முழுவீச்சில் இறங்கியுள்ளன. அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தேர்தலுக்கு தயாராக வருகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்து தேர்தல் தொடர்பான பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. சமீபத்தில், மநீம ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தது. 

அப்போது, கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். தேர்தல் பணிகளை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி அமைக்க வேண்டும். கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் மௌரியா, தங்கவேலு, பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் அடங்கிய தேர்தல்பணி ஒருங்கிணைப்புக் குழுவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்க இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement