For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களே உஷார்... மாலை 4 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
01:56 PM May 11, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களே உஷார்    மாலை 4 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
Advertisement

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி தொடங்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 16ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மாலை 4 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

சென்னை
திருவள்ளூர்

லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

காஞ்சிபுரம்
செங்கல்பட்டு

Tags :
Advertisement