For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பவித்திர உற்சவம்: அறியாத பிழைகளுக்குப் பிராயச்சித்தம் - திருமலையில் நடக்கும் சிறப்பு நிகழ்வு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பவித்திர உற்சவம் தொடங்கியது
03:36 PM Aug 05, 2025 IST | Web Editor
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பவித்திர உற்சவம் தொடங்கியது
பவித்திர உற்சவம்  அறியாத பிழைகளுக்குப் பிராயச்சித்தம்   திருமலையில் நடக்கும் சிறப்பு நிகழ்வு
Advertisement

Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று (ஆகஸ்ட் 5) பவித்திர உற்சவம் தொடங்கியது. ஆண்டு முழுவதும் அறியாமலோ அல்லது தெரிந்தேவோ நடந்த பிழைகளுக்குப் பிராயச்சித்தம் தேடும் விதமாகவும், கோவிலின் புனிதம் மற்றும் சுத்திகரிப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவின் முதல் நாளான நேற்று, விஷ்வக்சேனர் பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. அதன் பின்னர், ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.

இரண்டாம் நாளான இன்று (ஆகஸ்ட் 6), மூலவர், உற்சவ மூர்த்திகள் மற்றும் துணை சன்னதிகளுக்கு பவித்திர மாலைகள் சமர்ப்பிக்கப்படும். இந்த நிகழ்வின்போது, ஏழுமலையான் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

மேலும் விழாவின் இறுதி நாளான நாளை (ஆகஸ்ட் 7), மகா பூர்ணாஹுதி மற்றும் சக்ர ஸ்நானம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதன் மூலம், உற்சவ விழா நிறைவுபெறும்.

இந்த நாட்களில் பக்தர்களுக்கு பல்வேறு சேவைகள் (ஆர்ஜித சேவைகள்) ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பக்தர்கள் எப்போதும்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த பவித்திர உற்சவம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement