நாடாளுமன்ற தேர்தல் - ஆந்திராவில் போட்டியிட ஆர்வம் காட்டாத பாஜகவினர்!
இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வியூகங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தில் பாஜக சார்பில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன. ஆனால் ஆந்திராவில் எந்த கட்சியும் கூட்டணி குறித்து இன்னும் பேசவில்லை. ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக தெரிகிறது.
அந்த வகையில் காக்கிநாடாவை சேர்ந்த பீடாதிபதி பரிபூராணந்த சுவாமி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..