For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்: காலிறுதிக்கு இந்திய வில்வித்தை அணி தகுதி!

02:56 PM Aug 02, 2024 IST | Web Editor
பாரிஸ் ஒலிம்பிக்  காலிறுதிக்கு இந்திய வில்வித்தை அணி தகுதி
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா, அங்கிதா பகத் இணை காலிறுதிக்கு சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Advertisement

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 பதக்கங்கள் வென்றுள்ளது. இந்த மூன்று பதக்கங்களும் துப்பாக்கிச்சுடுதல் போட்டி மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. ஆண்களுக்கான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.

இதையும் படியுங்கள் : “மதுரை எய்ம்ஸ் – ஒரு செங்கலைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை” – மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

இந்நிலையில், தற்போது பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கிதா பகத் ஆகியோர் இந்தோனேசிய அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

Tags :
Advertisement