For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் வெற்றி! பஞ்சாப்பைச் சேர்ந்த ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி! முதல்வர் பகவந்த் மான் சிங் அறிவிப்பு!

10:10 PM Aug 08, 2024 IST | Web Editor
பாரிஸ் ஒலிம்பிக் வெற்றி  பஞ்சாப்பைச் சேர்ந்த ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ 1 கோடி  முதல்வர் பகவந்த் மான் சிங் அறிவிப்பு
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஞ்சாப்பைச் சேர்ந்த ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார்.

Advertisement

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது இந்திய அணி. ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது.

இதனால் இந்திய ஹாக்கி அணியினருக்கு பாராட்டுகள் குவியத்தொடங்கியுள்ளன. குறிப்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து கூறியுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் பாராட்டு தெரிவித்திருப்பதோடு, பரிசுத்தொகையும் அறிவித்துள்ளார்.

இது குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில்,“பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. பாரீஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் நான்காவது பதக்கம் வென்றது இந்தியா. இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள்.

கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், துணை கேப்டன் ஹர்திக் சிங் உள்பட 10 பஞ்சாப் வீரர்கள் அணியில் இருந்தது எங்களுக்கு மேலும் பெருமை. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் ஆர்வத்துடன் விளையாடினர். வெற்றி நமதே இந்தியா!” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எங்கள் விளையாட்டு கொள்கையின்படி வெண்கலம் வென்ற அணியில் அங்கம் வகித்த பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Tags :
Advertisement